திருப்பூர்: திருப்பூரில் சாய ஆலை சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால், 10-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளின் இயக்கத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் சாய ஆலை சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால், 10-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளின் இயக்கத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

திருப்பூரில் 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த சாய ஆலைகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய 18 பொது சுத்திகரிப்பு மையங்கள் இயங்குகின்றன. இவை தவிர சில சாய ஆலைகள், தனியே சுத்திகரிப்பு மையம் அமைத்து கழிவுகளை சுத்திகரித்து வருகின்றன.
இந்த நிலையில், திருப்பூர் பொது சுத்திகரிப்பு மையங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, காசிபாளையம் சுத்திகரிப்பு மையத்தில் ஆவியாக்கலுக்காக விடப்படும் தொட்டியில் கசிவு இருப்பதையும், உப்பு நீர் கழிவுகள் நிலத்துக்குள் செல்வதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து, இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்குட்பட்ட 12 சாய ஆலைகளின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர். கசிவு சரி செய்த பின்னர் மீண்டும் இயங்கும் என மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூரில் 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த சாய ஆலைகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய 18 பொது சுத்திகரிப்பு மையங்கள் இயங்குகின்றன. இவை தவிர சில சாய ஆலைகள், தனியே சுத்திகரிப்பு மையம் அமைத்து கழிவுகளை சுத்திகரித்து வருகின்றன.
இந்த நிலையில், திருப்பூர் பொது சுத்திகரிப்பு மையங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, காசிபாளையம் சுத்திகரிப்பு மையத்தில் ஆவியாக்கலுக்காக விடப்படும் தொட்டியில் கசிவு இருப்பதையும், உப்பு நீர் கழிவுகள் நிலத்துக்குள் செல்வதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து, இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்குட்பட்ட 12 சாய ஆலைகளின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர். கசிவு சரி செய்த பின்னர் மீண்டும் இயங்கும் என மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.