திருப்பூரில் 10-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளின் செயல்பாடு நிறுத்தம்

திருப்பூர்: திருப்பூரில் சாய ஆலை சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால், 10-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளின் இயக்கத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் சாய ஆலை சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறால், 10-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளின் இயக்கத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.



திருப்பூரில் 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த சாய ஆலைகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய 18 பொது சுத்திகரிப்பு மையங்கள் இயங்குகின்றன. இவை தவிர சில சாய ஆலைகள், தனியே சுத்திகரிப்பு மையம் அமைத்து கழிவுகளை சுத்திகரித்து வருகின்றன. 

இந்த நிலையில், திருப்பூர் பொது சுத்திகரிப்பு மையங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, காசிபாளையம் சுத்திகரிப்பு மையத்தில் ஆவியாக்கலுக்காக விடப்படும் தொட்டியில் கசிவு இருப்பதையும், உப்பு நீர் கழிவுகள் நிலத்துக்குள் செல்வதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து, இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்குட்பட்ட 12 சாய ஆலைகளின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.  கசிவு சரி செய்த பின்னர் மீண்டும் இயங்கும் என மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...