உங்களது குழந்தைகள் பயிலும் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்றுள்ளதா எனத் தெரிய வேண்டுமா..?

குழந்தைகளுக்கு தரமுள்ள கல்வியை வழங்க நினைக்கும் பெற்றோர்கள், தங்களது மகன் பயிலும் பள்ளி சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

குழந்தைகளுக்கு தரமுள்ள கல்வியை வழங்க நினைக்கும் பெற்றோர்கள், தங்களது மகன் பயிலும் பள்ளி சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். 

வியாபாரமாகிய கல்வி :

தற்போதைய காலகட்டத்தில் மருத்துவம் முதல் அனைத்திலும் ஊழல் மற்றும் முறைகேடுகள் இல்லாத இடமே கிடையாது. இதில், கல்விக்கு மட்டும் விதிவிலக்கல்ல. ஒவ்வொரு சாதாரண பெற்றோர்களும், தங்களது பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற ஆசையில், லட்சம் லட்சமாக தனியார் பள்ளிகளுக்கு கொட்டிக் கொடுத்து வருகின்றனர். மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் அடிப்படைக் கல்வியும் தேவை என்றாகிவிட்ட நிலையில், பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற சில பண முதலைகள், கல்வியை வியாபாரமாக்கி வருகின்றனர். சி.பி.எஸ்.இ., என்ற பெயரில் உரிய அனுமதியும், அங்கீகாரமும் இல்லாமல் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

எனவே, தனது பிள்ளைகள் பயிலும், பள்ளிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டது தானா என்ற சந்தேகம் அனைத்து பெற்றோர்களிடமும் எழுந்துள்ள பொதுவான அச்சமாகும். இந்த நிலையில், தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ.,யில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா..? என்பதைத் தெரிந்து கொள்ளப் பெற்றோர்களுக்கு இருவழிமுறைகள் உள்ளன. 

836 பள்ளிகள் மட்டுமே :

தமிழகத்தில் மொத்தம் 836 பள்ளிகள் மட்டுமே சி.பி.எஸ்.இ.,யின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் கணக்கில் அடங்காதவாறு பள்ளிகள் சி.பி.எஸ்.இ., என அடையாளப்படுத்திக் கொண்டு, கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. எனவே, இதனைக் கண்டறியும் வகையில் சி.பி.எஸ்.இ., யின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் (http://cbseaff.nic.in/cbse_aff/schdir_Report/userview.aspx) ஆராயலாம். அதில், தங்களது மகன் படிக்கும் பள்ளியின் பெயர் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை வைத்துக் கண்டறிய முடியும். 

புத்தகத்தில் வேறுபாடு :

அதே போல, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புத்தகத்தில் பதிப்பகத்தில் வேறுபாடு காணப்படும். அதாவது, உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி, என்.சி.இ.ஆர்.டி.,(NCERT) புத்தகங்கள் மட்டுமே சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் வழங்கப்படும். ஏனெனில், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களின் அதிகபட்ச விலை ரூ. 550 மட்டுமே இருக்கும். ஆனால், பிற புத்தகங்கள் ரூ. 5,000 முதல் ரூ. 6,000 வரையிலான தொகை அடங்கும். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...