பிரேசில் - கோஸ்டாரிக் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியைத் தொடங்கி வைத்த இந்தியச் சிறுமி யார் தெரியுமா..?

பிரேசில் - கோஸ்டாரிகா அணிக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை தொடங்கி வைத்த இந்திய சிறுமி என்ற பெருமையை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-வயது சிறுமி பெற்றுள்ளார்.

பிரேசில் - கோஸ்டாரிகா அணிக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை தொடங்கி வைத்த இந்திய சிறுமி என்ற பெருமையை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-வயது சிறுமி பெற்றுள்ளார். 

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஒவ்வொரு போட்டிகளிலும் பயன்படுத்தப்படும் பந்துகளை, சிறுமியின் கைகளால் எடுத்து வரப்பட்டு, போட்டிகளை ஆரம்பிக்கப்படும். இதற்காக, உலகம் முழுவதும் சிறுமிகளுக்கென ஓ.எம்.பி.சி. எனப்படும் அதிகாரப்பூர்வ போட்டியின் பந்தை எடுத்து வருபவருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. 

இதில், இந்தியா சார்பில், 1,600 சிறுமிகள் தேர்வாகினர். அதில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த 11 வயது சிறுமி கே. நதினா ஜான் மற்றும் ரிஷி தேஜ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்தியா சார்பில் 2 பேர் உலகக் கோப்பைப் போட்டியை தொடங்கி வைக்கச் செல்வது முதல்முறையாகும். உலக அளவில் 64 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில் பிரேசில், கோஸ்டாரிகா அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கான பந்தை கோத்தகிரி சிறுமி நதினா ஜான் எடுத்து வந்து, போட்டியைத் தொடங்கி வைத்தார். இதன்மூலம், உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை தொடங்கி வைத்த முதல் தமிழக சிறுமி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் 2-க்கு-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தி பிரேசில் அணி வெற்றி பெற்றுள்ளது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...