மேட்டுப்பாளையம் அருகே 36 மணிநேரம் இடைவிடாமல் நடைபெறும் மராத்தான் இசைக்கச்சேரி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சாதனை முயற்சியாக தொடர்ந்து 36 மணிநேரம் இடைவிடாமல் நடைபெறும் மராத்தான் இசைக்கச்சேரி இன்று தொடங்கியது.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சாதனை முயற்சியாக தொடர்ந்து 36 மணிநேரம் இடைவிடாமல் நடைபெறும் மராத்தான் இசைக்கச்சேரி இன்று தொடங்கியது.

பாரம்பரிய இசைக்கலைகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஒரு சாதனை முயற்சியாக தொடர்ந்து 36 மணிநேரம் இடைவிடாமல் நடத்தப்படும் இசைக்கச்சேரி இன்று தொடங்கியது. ஸ்ரீசாய் கலாசேத்ரா சார்பில் மிக அதிக நேரம் தொடர்ந்து நடத்தப்படும் இந்த மராத்தான் இசை நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 43 பேர் ஒருங்கிணைந்து, வாய்ப்பாட்டு, கர்நாடக சங்கீதம், வீணையிசை, கிடார் மற்றும் கீபோர்ட் என இசைக்கருவிகளை வாசித்தும் பாடியும் வருகின்றனர்.

இந்த சாதனை முயற்சிக்கு கடந்த பத்து மாதங்களாகத் தீவிர பயிற்சியெடுத்து களம் இறங்கியுள்ள இக்கலை குழுவினர், இன்று சனிக்கிழமை காலை ஏழு மணிக்குத் துவங்கி நாளை ஞாயிறன்று இரவு ஒன்பது மணிக்கு நிறைவடைய உள்ளது. முறைப்படி சங்கீதம் கற்ற இளம் மாணவிகள், வீணை உள்ளிட்ட இசைக்கருவிகளை இடைவிடாமல் வாசிப்பதையும், பாடுவதையும் பலரும் கண்டு ரசித்து வருகின்றனர். நமது பண்பாடு மற்றும் பாரம்பரிய இசையைப் பலரது கவனத்திற்கு கொண்டு சேர்க்கும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...