உதகை எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்

நீலகிரி: உதகையில் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் எச்.ஏ.டி.பி., மைதான சீரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: உதகையில் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் எச்.ஏ.டி.பி., மைதான சீரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கட்டுப்பாட்டில் உதகை எச்.ஏ.டி.பி., மைதானம் உள்ளது. இங்கு, தடகளம் மற்றும் கால்பந்து, வாலிபால் உட்பட பல்வேறு விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆண்டுதோறும் இங்கு மாநில, தேசிய, சர்வதேச அளவிலான வீரர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால், இந்த மைதானத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.



இதைத் தொடர்ந்து, இந்த மைதானத்தைப் புனரமைக்க, மத்திய நகர்ப்புற விளையாட்டு உள்கட்டமைப்பு சார்பில் நிதி ரூ. 5 கோடியும், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ரூ. 2 கோடியும் ஒதுக்கப்பட்டது. இதில், இங்குள்ள தடகள மைதானத்தை 'சிந்தடிக்' ஓடுதளமாக தரம் உயர்த்தத் திட்டமிடப்பட்டது. இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டன. டெண்டர் எடுத்த நாளில் இருந்து ஒரு ஆண்டுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.



கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்தப் பணிகளை செய்து வந்தது. பல்வேறு காரணங்களால் இப்பணி தாமதமாக தொடங்கியது. இதனால், குறிப்பிட்ட காலத்துக்குள் பணி நிறைவு பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, தற்போது, பணியில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால், நிதி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இங்குப் பணிகள் நிறைவு பெறாத காரணத்தால், விளையாட்டு வீரர்களும் பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது.



இது குறித்து விளையாட்டு வீரர்கள் கூறுகையில், "இங்கு முன்பு, நாள்தோறும் காலை, மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள, நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். மேலும், பல்வேறு பயிற்சிகளுக்கும், விளையாட்டு வீரர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், மைதானத்தின் பணிகள் விரைவாக நிறைவு பெற்றால், கால்பந்து, தடகளம் உட்பட பிற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்குவிப்பதாக அமையும். இங்குப் பணியாற்றிய விளையாட்டு அலுவலர் ஓய்வு பெற்று சென்றார். இதனால், பணியில் மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...