எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தாலும் மத்திய அரசைப் பாராட்டாத தமிழக அரசியல் கட்சிகள்: கோவையில் தமிழிசை வருத்தம்

கோவை: எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு கொண்டு வந்தாலும், இங்குள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்குப் பாராட்டை தெரிவிக்க மறுப்பதாக பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.



கோவை: எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு கொண்டு வந்தாலும், இங்குள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்குப் பாராட்டை தெரிவிக்க மறுப்பதாக பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- மத்திய அரசு எதற்கெல்லாம் விமர்சிக்கப்பட்டதோ. அதெல்லாம் சரி செய்யப்பட்டது. பன்னெடுங்காலமாக புறக்கணிப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொண்டு வந்தாலும், சில கட்சிகள் மத்திய அரசுக்கு பாராட்டை தெரிவிக்க மறுக்கின்றனர். 

காவிரி விவகாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். நீதிமன்றத்திற்கு போவோம் எனச் சொல்லும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கண்டிக்கப்பட வேண்டியவர். காவிரி விவகாரத்தில் கமல்ஹாசன் உட்பட எந்தக் கட்சியும் குமாராசாமிக்கு எதிர்ப்பைக் காட்டவில்லை. மேலும், மத்திய அரசு தமிழக வளர்ச்சிக்காகக் கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் இருக்கின்றார். கர்நாடக முதலமைச்சர் குமாராசாமி தமிழகத்திற்கு எதிராக பேசும் நிலையில், அவருக்கு எதிராக தமிழக கட்சிகள் போராடவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில், எதிர்கட்சிகள் காட்டிய கருப்புக்கொடி, கருப்பு பலூன் போன்றவற்றைத் திரும்ப பெற வேண்டும். ஸ்டாலின் பெங்களூருக்கு நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும். 

குட்கா விவகாரத்தில் எந்தக் கட்சி தவறு செய்து இருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா விவகாரம் 10-15 வருடங்களாக தமிழகத்தில் நடைபெற்று வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுமே விசாரிக்கப்பட வேண்டியவர்கள் தான். குட்கா வழக்கில் சி.பி.ஐ., விசாரணை முழுமையாக நடத்தப்பட வேண்டும். எதற்கெடுத்தாலும் ஆட்சியாளர்களை ராஜினாமா செய்ய சொல்வது என்பது சரியாக இருக்காது. குட்கா விவகாரத்தில் மத்திய அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா மீது பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து தவறான குற்றச்சாட்டுகள், காங்கிரஸ் கட்சியால் முன் வைக்கப்படுகின்றது. பா.ஜ.க., மீது எந்த புகாரும் இல்லாததால் காங்கிரஸ் கட்சி அமித்ஷா மீது தவறான தகவல்களை பரப்புகின்றது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...