திருப்பூர்: திருப்பூர் அருகே புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட லட்சுமி தியேட்டர் சாலையில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நேற்று கடையில் பூஜை செய்யப்பட்டதுடன், மதுபாட்டில்களும் லாரியில் இருந்து வந்து இறங்கியது. இதையறிந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., த.மா.கா., பா.ஜ.க., கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட கடை முன்பு திரண்டனர்.
பின்னர், அவர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அனைவரும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த டாஸ்மாக் அதிகாரி மற்றும் 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து, அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். 3 மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட லட்சுமி தியேட்டர் சாலையில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நேற்று கடையில் பூஜை செய்யப்பட்டதுடன், மதுபாட்டில்களும் லாரியில் இருந்து வந்து இறங்கியது. இதையறிந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., த.மா.கா., பா.ஜ.க., கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட கடை முன்பு திரண்டனர்.
பின்னர், அவர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அனைவரும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த டாஸ்மாக் அதிகாரி மற்றும் 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து, அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். 3 மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.