விரைவில் அறிமுகமாகிறது இளம் தலைமுறையினருக்கான 'ஸ்டார்ட் அப் பாலிசி திட்டம்'

கோவை: தமிழகத்தில் இளம் தலைமுறையினரை தொழில்முனைவோர்களாக மாற்றும் ஸ்டார்ட் அப் பாலிசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என சிறு, குறுந்தொழில் துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.



கோவை: தமிழகத்தில் இளம் தலைமுறையினரை தொழில்முனைவோர்களாக மாற்றும் ஸ்டார்ட் அப் பாலிசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என சிறு, குறுந்தொழில் துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஃபோர்ஜ் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018' போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அப்போது. நாடு முழுவதும் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக சிறு, குறு தொழில்துறையின் முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்களின் அரியக் கண்டுபிடிப்புகள் பாராட்டத்தக்கது. தமிழக அரசும் மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, தமிழக அரசு அறிவித்துள்ள "இனோவேசன் வவுச்சர் ஸ்கீம்" எனப்படும் திட்டம் மூலம் மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புகளை முழு வடிவமாக்க ரூ. 2 முதல் ரூ. 5 லட்சம் வரை நிதி உதவி அளித்து வருகிறது. இதுபோன்று ஆண்டிற்கு 400 புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவ முடிவு செய்துள்ளோம். அதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் தொழில் துவங்குவதை ஊக்குவிப்பதற்கான 'ஸ்டார்ட் அப் பாலிசி திட்டம்' அடுத்த மூன்று மாதங்களில் செயல்படுத்தப்படும்.

இதேபோல, தமிழகத்திலுள்ள மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பலகலைக்கழகம் உட்பட 300 கல்லூரிகளில் தொழில் முனைவோர் மையம் துவங்கப்பட்டுள்ளது. மேலும், 150 கல்லூரிகளில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...