நீலகிரி : கூடலூர் அருகே வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஜீன்பூல் தாவர மையத்தில் இன்று முதல் சூழல் தொடங்கப்பட்டுள்ளது.
நீலகிரி : கூடலூர் அருகே வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஜீன்பூல் தாவர மையத்தில் இன்று முதல் சூழல் தொடங்கப்பட்டுள்ளது.
கூடலூர் அருகேயுள்ள நாடுகாணி பகுதியில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் ஜீன்பூல் தாவரமையம் உள்ளது. இந்த மையத்தில் அரிய வகை மரங்கள், செடிகள், மூலிகை செடிகள், பல்வேறு காலநிலைகளில் வளரும் தாவரங்கள் என பலவற்றை பராமரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, அதற்குள் அமைந்துள்ள காட்சிப் பகுதியில் இருந்து கேரளா பள்ளத்தாக்கு உள்ளிட்ட இயற்கை அழகை ரசிக்க முடியும். ஆனால், ஜீன்பூல் தாவர மையத்திற்குள் செல்ல இதுநாள் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இன்று முதல் ஜீன்பூல் தாவர மையத்தில் சூழல் சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது. உள்ளூர் பழங்குடியினர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், இந்தத் திட்டம் இன்று தொடங்கப் பட்டுள்ளது. ஜீன்பூல் தாவர மையத்தில் காட்டு யானை உள்ளிட்ட விலங்கு நடமாட்டம் இருப்பதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறை பாதுகாப்புடன் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சுற்றுலாப் பயணிகள் தங்கி இயற்கையை ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜீன்பூல் தாவர மையத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசிப்பதோடு, தாவரங்கள் குறித்த அரிய தகவல்களை தெரிந்து கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கூடலூர் அருகேயுள்ள நாடுகாணி பகுதியில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் ஜீன்பூல் தாவரமையம் உள்ளது. இந்த மையத்தில் அரிய வகை மரங்கள், செடிகள், மூலிகை செடிகள், பல்வேறு காலநிலைகளில் வளரும் தாவரங்கள் என பலவற்றை பராமரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, அதற்குள் அமைந்துள்ள காட்சிப் பகுதியில் இருந்து கேரளா பள்ளத்தாக்கு உள்ளிட்ட இயற்கை அழகை ரசிக்க முடியும். ஆனால், ஜீன்பூல் தாவர மையத்திற்குள் செல்ல இதுநாள் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இன்று முதல் ஜீன்பூல் தாவர மையத்தில் சூழல் சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது. உள்ளூர் பழங்குடியினர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், இந்தத் திட்டம் இன்று தொடங்கப் பட்டுள்ளது. ஜீன்பூல் தாவர மையத்தில் காட்டு யானை உள்ளிட்ட விலங்கு நடமாட்டம் இருப்பதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறை பாதுகாப்புடன் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சுற்றுலாப் பயணிகள் தங்கி இயற்கையை ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜீன்பூல் தாவர மையத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசிப்பதோடு, தாவரங்கள் குறித்த அரிய தகவல்களை தெரிந்து கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.