கோவை : அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை : அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ சிறப்பு மாநாடு கோவையில் தனியார் அரங்கில் நடைபெறுகிறது. மாநாட்டில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வேலையின்மையால் இளைஞர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற சூழலில், அரசுத்துறையில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. உடனடியாக அனைத்து பணியிடங்களையும் நிரப்பத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
மேலும், வட்டாரங்களில் உருவாகும் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஒரு உதவி இயக்குநர் பணியிடம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நாளை நடைபெற உள்ள மாநாட்டில் பல்வேறு துறைச் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றியும், கோரிக்கைகளை வென்றெடுக்கும் இயக்க முடிவுகள் குறித்தும் பிரதிநிதிகள் விவாதித்து முடிவெடுக்க உள்ளனர். இம்மாநாட்டில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ சிறப்பு மாநாடு கோவையில் தனியார் அரங்கில் நடைபெறுகிறது. மாநாட்டில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வேலையின்மையால் இளைஞர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற சூழலில், அரசுத்துறையில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. உடனடியாக அனைத்து பணியிடங்களையும் நிரப்பத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
மேலும், வட்டாரங்களில் உருவாகும் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஒரு உதவி இயக்குநர் பணியிடம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நாளை நடைபெற உள்ள மாநாட்டில் பல்வேறு துறைச் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றியும், கோரிக்கைகளை வென்றெடுக்கும் இயக்க முடிவுகள் குறித்தும் பிரதிநிதிகள் விவாதித்து முடிவெடுக்க உள்ளனர். இம்மாநாட்டில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.