குடிநீர் விநியோகத் திட்டத்தை தனியார்வசம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு : வலுவான போராட்டம் நடத்த சி.பி.எம்., முடிவு

கோவை : குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என கோவை மாநகராட்சியைக் கண்டித்து மக்களை திரட்டி வலுவான போராட்டம் நடத்த சி.பி.எம்., மாவட்டக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


கோவை : குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என கோவை மாநகராட்சியைக் கண்டித்து மக்களை திரட்டி வலுவான போராட்டம் நடத்த சி.பி.எம்., மாவட்டக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் காந்திபுரத்தில் உள்ள மாவட்டக்குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். வேலுசாமி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் வி. இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி. பத்மநாபன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர். நடராஜன் மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இம்மாவட்டக்குழு கூட்டத் தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் வி. இராமமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில், குடிநீரை விநியோகிப்பது மற்றும் பராமரிப்பது ஆகியவற்றை பிரஞ்ச் நிறுவனமான 'சூயிஸ்' நிறுவனத்திடம் கோவை மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. தற்போது, இதற்கான ஆரம்ப கட்ட வேலையை சூயிஸ் கார்ப்ரேட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. உயிரினங்களின் அத்தியாவசிய தேவையான குடிநீரை வணிகமயமாக்கும் முடிவை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. 

இந்நிலையில், தனியாரின் பராமரிப்பில் தண்ணீரை விடும் மாநகராட்சியின் இம்முடிவு கோவை மக்களை பெரும் துயரத்தில் தள்ளிவிடும். ஆகவே, உடனடியாக கோவை மாநகராட்சி சூயிஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து, தண்ணீரை வணிமயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டும். மேலும், இதுகுறித்து முதற்கட்டமாக வரும் 28-ம் தேதி கோவை மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்களைத் திரட்டி வலுமிக்க போராட்டத்தை நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு முடிவெடுத்துள்ளது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடிநீர் விநியோகத் திட்டம் தனியார்மயமாக்கல் குறித்த அச்சத்தை போக்கும் வகையில், கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பிரத்யேக விளக்கம்

கிளிக் செய்யவும்

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...