தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

நீலகிரி : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கக் கோரி உதகையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கக் கோரி உதகையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

உதகையில் கடந்த மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி நடைபெற்ற பேரணியின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 



இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கக் கோரி உதகையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி நிதி வழங்க வேண்டும். இந்தத் துப்பாக்கிச்சூடு வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும், தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரை திரும்பப் பெற வேண்டும். 

உதகையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அந்த விபத்து குறித்து உரிய விசாரணையை தமிழக அரசு நடத்த வேண்டும். மூடப்பட்டுள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையை மருத்துவக் கல்லூரியாகவோ அல்லது பல்நோக்கு மருத்துவமனையாகவோ அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...