நீலகிரி : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கக் கோரி உதகையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கக் கோரி உதகையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உதகையில் கடந்த மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி நடைபெற்ற பேரணியின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கக் கோரி உதகையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி நிதி வழங்க வேண்டும். இந்தத் துப்பாக்கிச்சூடு வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும், தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரை திரும்பப் பெற வேண்டும்.
உதகையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அந்த விபத்து குறித்து உரிய விசாரணையை தமிழக அரசு நடத்த வேண்டும். மூடப்பட்டுள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையை மருத்துவக் கல்லூரியாகவோ அல்லது பல்நோக்கு மருத்துவமனையாகவோ அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உதகையில் கடந்த மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி நடைபெற்ற பேரணியின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கக் கோரி உதகையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி நிதி வழங்க வேண்டும். இந்தத் துப்பாக்கிச்சூடு வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும், தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரை திரும்பப் பெற வேண்டும்.
உதகையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அந்த விபத்து குறித்து உரிய விசாரணையை தமிழக அரசு நடத்த வேண்டும். மூடப்பட்டுள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையை மருத்துவக் கல்லூரியாகவோ அல்லது பல்நோக்கு மருத்துவமனையாகவோ அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.