பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் கனரக வாகனங்கள் : குறுகிய சாலையால் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்

கோவை : மேட்டுப்பாளையம் நடூர் நகராட்சியில் போடப்பட்டுள்ள குறுகிய சாலையில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால், அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.


கோவை : மேட்டுப்பாளையம் நடூர் நகராட்சியில் போடப்பட்டுள்ள குறுகிய சாலையில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால், அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 29-வது வார்டு பகுதியில் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக இருக்கும் மேட்டுப்பாளையத்தை கடந்துதான், உதகைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டும். இதனால், நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் நடூர் வழியாக செல்லுமாறு போக்குவரத்தில் போலீசார் தற்காலிகமாக மாற்றம் செய்தனர். தற்காலிகமாக செய்யப்பட்ட இந்த ஏற்பாடு, பின்னர் நிரந்தரமாக செயல்பட்டு வருகிறது.

நகராட்சியின் மிக குறுகிய சாலையாக இருக்கும் இந்த சாலையில்தான் நகராட்சி அரசுப்பள்ளி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. காலை நேரத்தில் இந்த சாலைகள் மார்க்கத்தில், அதிவேகமாக வரும் வாகனங்களால் பள்ளி குழந்தைகளும் அப்பகுதி மக்களும் கடும் அச்சத்தில் உள்ளனர். கனரக வாகனமான பேருந்தோ அல்லது லாரிகளோ ஒன்று வந்தால் கூட, அதனை நடந்து செல்பவர்களே விலகி செல்ல முடியாத அளவுக்கு சாலை குறுகிய நிலையில் உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும், அந்த சாலை மார்க்கமாக வரும் வாகன ஓட்டிகளும் இதனைக் கடந்து செல்வதை பெரும் சவாலாக எதிர்கொண்டு வருகின்றனர். 



குறிப்பாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அன்னூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும், இந்த நகராட்சி சாலைகளில்தான் இயக்கப்படுகின்றன. இதனால், சாலை ஓரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகமும் தடைபெறுகிறது. 

இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நகராட்சிக்கு ஆணையாளர் என தனியாக அரசு நியமிக்காத காரணத்தால், கூடுதல் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் இதனை கண்டுகொள்வதில்லை. மேலும், புகார் பெறும் அதிகாரிகள் தான் மாறி மாறி செல்கின்றனர். தங்கள் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை என அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தப் பிரச்சனையில். மாவட்ட நிர்வாகம் தலையிட்டாவது, உரிய தீர்வு கண்டு கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாக வருவதைத் தடை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...