கோவை : டி.ஐ.பி.எஸ்., பள்ளியின் சார்பில் யோகா வாரத்தினை முன்னிட்டு, 150 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை : டி.ஐ.பி.எஸ்., பள்ளியின் சார்பில் யோகா வாரத்தினை முன்னிட்டு, 150 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக, டி.ஐ.பி.எஸ்., பள்ளியின் சார்பில் யோகா வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதில், 'விதைகளை நடுவோம்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு, ZF வின்ட்பவர் கோவை நிறுவனத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதனைப் பள்ளியின் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் நடவு செய்தனர்.
