அடுத்த ஆண்டு முதல் அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு முதல் அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது: அடுத்தாண்டு முதல் அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மாவட்டத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இனி வேறு மாநிலங்களில், தமிழக மாணவர்கள் தேர்வு எழுதும் நிலை எற்படாது. மாநில பாடத்திட்டத்தில் இருந்தும் நீட் தேர்வுக்கு கேள்விகள் இடம்பெறும்.
தமிழில் கேள்வி கேட்க, நல்ல மொழி பெயர்ப்பாளர்களை தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை விரைவில் வெளியாகும். திறமையான ஆராய்ச்சி மாணவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்க இந்தியாவிலேயே ஆய்வு கூட்டமைப்பு அமைக்கப்படும். மாதம் ரூ.1 லடசம் வரை ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவி நிதி வழங்கப்படும். தமிழகத்தில் கேந்த்ரியா வித்யாலயா பள்ளிகள் கூடுதலாக துவங்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது: அடுத்தாண்டு முதல் அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மாவட்டத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இனி வேறு மாநிலங்களில், தமிழக மாணவர்கள் தேர்வு எழுதும் நிலை எற்படாது. மாநில பாடத்திட்டத்தில் இருந்தும் நீட் தேர்வுக்கு கேள்விகள் இடம்பெறும்.
தமிழில் கேள்வி கேட்க, நல்ல மொழி பெயர்ப்பாளர்களை தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை விரைவில் வெளியாகும். திறமையான ஆராய்ச்சி மாணவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்க இந்தியாவிலேயே ஆய்வு கூட்டமைப்பு அமைக்கப்படும். மாதம் ரூ.1 லடசம் வரை ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவி நிதி வழங்கப்படும். தமிழகத்தில் கேந்த்ரியா வித்யாலயா பள்ளிகள் கூடுதலாக துவங்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.