கோவை: கோவை-பெங்களூர் இடையே புதிதாக தொடங்கப்பட்ட உதய் எக்ஸ்பிரஸ் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை: கோவை-பெங்களூர் இடையே புதிதாக தொடங்கப்பட்ட உதய் எக்ஸ்பிரஸ் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 8-ம் தேதி இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, கோவையில் இருந்து பெங்களூருக்கு இந்த ரயில் செல்லும் போது, வார நாட்களில் 50 சதவீதமும், வார இறுதி நாட்களில் 70 சதவீத பயணிகளும் பயணிக்கின்றனர். இதே போல், பெங்களூரில் இருந்து கோவைக்கு செல்லும் போது வார நாட்களில் 50 சதவீதமும், வார இறுதி நாட்களில் 90 சதவீத பயணிகளும் பயணிக்கின்றனர்.

இந்த ரயிலில் மூன்று குழுக்களிலும் பெண் டிக்கெட் பரிசோதகர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் நான்கு பெண்கள் உள்ளனர். இந்த ரயிலில் உள்ள எட்டு பெட்டிகளில் மூன்று பெட்டிகள் உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதரான டபுள் டெக்கர் பேட்டியில் 120 இருக்கைகளும், டைனிங் வசதியுள்ள பெட்டிகளில் 104 இருக்கைகளும் உள்ளன. திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த ரயில் இயங்கும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.