நீலகிரி: ஊட்டி படகு இல்ல ஏரியை தூர்வாருவதற்காக, ஐந்து அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு, ஏரியின் நீர் மட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி: ஊட்டி படகு இல்ல ஏரியை தூர்வாருவதற்காக, ஐந்து அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு, ஏரியின் நீர் மட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

ஊட்டி நகராட்சியின் பெரும்பாலான வார்டுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கோடப்பமந்து கால்வாய் வழியாக, ஊட்டி ஏரியின் கரையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு, சுத்திகரிக்கப்பட்ட பின், ஊட்டி படகு இல்ல ஏரிக்குள் தண்ணீர் விடப்படுகிறது.
மழைக் காலங்களில் வெள்ளம் அதிகரிக்கும் போது, கழிவு நீரை சுத்திகரிக்காமல் ஏரியில் நேரடியாக விடுகின்றனர். இதனால் தற்போது, ஏரி முழுவதும் சகதி அதிகரித்து, சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால், ஏரியை தூர்வார வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஊட்டி நகராட்சி பொதுப்பணித் துறை அதிகாரிகள் இணைந்து, ஏரியை தூர்வார முடிவு செய்தனர். பருவமழையால் தூர்வாரும் பணிகளை தொடங்க முடியவில்லை. தற்போது, ஓரளவு மழை குறைந்துள்ளதால் ஏரியை தூர்வாரும் முற்கட்ட பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக, ஏரியில் ஐந்து அடிவரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு நீர் மட்டம் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சவாரியில் எந்த பாதிப்பும் இன்றி வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. இது குறித்து நகராட்சி கமிஷனர் ரவி கூறுகையில், ''ஏரிக் கரையோரம் காய்ந்த பின், நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து, தூர்வாரும் பணியை தொடங்க உள்ளோம்." என்றார்.

ஊட்டி நகராட்சியின் பெரும்பாலான வார்டுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கோடப்பமந்து கால்வாய் வழியாக, ஊட்டி ஏரியின் கரையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு, சுத்திகரிக்கப்பட்ட பின், ஊட்டி படகு இல்ல ஏரிக்குள் தண்ணீர் விடப்படுகிறது.
மழைக் காலங்களில் வெள்ளம் அதிகரிக்கும் போது, கழிவு நீரை சுத்திகரிக்காமல் ஏரியில் நேரடியாக விடுகின்றனர். இதனால் தற்போது, ஏரி முழுவதும் சகதி அதிகரித்து, சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால், ஏரியை தூர்வார வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஊட்டி நகராட்சி பொதுப்பணித் துறை அதிகாரிகள் இணைந்து, ஏரியை தூர்வார முடிவு செய்தனர். பருவமழையால் தூர்வாரும் பணிகளை தொடங்க முடியவில்லை. தற்போது, ஓரளவு மழை குறைந்துள்ளதால் ஏரியை தூர்வாரும் முற்கட்ட பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக, ஏரியில் ஐந்து அடிவரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு நீர் மட்டம் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சவாரியில் எந்த பாதிப்பும் இன்றி வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. இது குறித்து நகராட்சி கமிஷனர் ரவி கூறுகையில், ''ஏரிக் கரையோரம் காய்ந்த பின், நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து, தூர்வாரும் பணியை தொடங்க உள்ளோம்." என்றார்.