தூர்வாரும் பணி: ஊட்டி படகு இல்ல ஏரியில் நீர் வெளியேற்றம்

நீலகிரி: ஊட்டி படகு இல்ல ஏரியை தூர்வாருவதற்காக, ஐந்து அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு, ஏரியின் நீர் மட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: ஊட்டி படகு இல்ல ஏரியை தூர்வாருவதற்காக, ஐந்து அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு, ஏரியின் நீர் மட்டம் குறைக்கப்பட்டுள்ளது.



ஊட்டி நகராட்சியின் பெரும்பாலான வார்டுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கோடப்பமந்து கால்வாய் வழியாக, ஊட்டி ஏரியின் கரையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு, சுத்திகரிக்கப்பட்ட பின், ஊட்டி படகு இல்ல ஏரிக்குள் தண்ணீர் விடப்படுகிறது.

மழைக் காலங்களில் வெள்ளம் அதிகரிக்கும் போது, கழிவு நீரை சுத்திகரிக்காமல் ஏரியில் நேரடியாக விடுகின்றனர். இதனால் தற்போது, ஏரி முழுவதும் சகதி அதிகரித்து, சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால், ஏரியை தூர்வார வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ஊட்டி நகராட்சி பொதுப்பணித் துறை அதிகாரிகள் இணைந்து, ஏரியை தூர்வார முடிவு செய்தனர். பருவமழையால் தூர்வாரும் பணிகளை தொடங்க முடியவில்லை. தற்போது, ஓரளவு மழை குறைந்துள்ளதால் ஏரியை தூர்வாரும் முற்கட்ட பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளனர்.



இதற்காக, ஏரியில் ஐந்து அடிவரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு நீர் மட்டம் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சவாரியில் எந்த பாதிப்பும் இன்றி வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. இது குறித்து நகராட்சி கமிஷனர் ரவி கூறுகையில், ''ஏரிக் கரையோரம் காய்ந்த பின், நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து, தூர்வாரும் பணியை தொடங்க உள்ளோம்." என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...