பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 25-ம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 10,000 கோடி மதிப்பில் சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த சாலை அமைக்க சென்னை முதல் சேலம் வரையில் 30 மீட்டர் அகலத்திற்கு, மொத்தம் சுமார் 2,200 ஹெக்டே அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது, சம்பந்தப்பட்ட நிலங்களில் உள்ள சுமார் 40,000 வீடுகள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள் இடிக்கப்படும். இதற்கு ஏராளமான விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை - சேலம் வரையில் 8 வழி பசுமை வழிச்சாலைக்கு எதிராக சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் போராட்டம் நடத்தினர். இதனால், அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இவர்கள் சார்பில் சேலம் மாவட்டம் ஓமலூர் கிளை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுவதால் பியூஷ் மானுஷ், மன்சூர் அலிகான் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதே சமயம், நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை நிராகரித்தனர்.
கடந்த பிப்ரவரி 25-ம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 10,000 கோடி மதிப்பில் சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த சாலை அமைக்க சென்னை முதல் சேலம் வரையில் 30 மீட்டர் அகலத்திற்கு, மொத்தம் சுமார் 2,200 ஹெக்டே அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது, சம்பந்தப்பட்ட நிலங்களில் உள்ள சுமார் 40,000 வீடுகள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள் இடிக்கப்படும். இதற்கு ஏராளமான விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை - சேலம் வரையில் 8 வழி பசுமை வழிச்சாலைக்கு எதிராக சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் போராட்டம் நடத்தினர். இதனால், அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இவர்கள் சார்பில் சேலம் மாவட்டம் ஓமலூர் கிளை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுவதால் பியூஷ் மானுஷ், மன்சூர் அலிகான் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதே சமயம், நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை நிராகரித்தனர்.