பள்ளிக்கல்வித்துறையில் ஆசிய துணை கண்டமே திரும்பிப் பார்க்கும் வகையில் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூர்: ஆசிய துணை கண்டமே திரும்பி பார்க்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: ஆசிய துணை கண்டமே திரும்பி பார்க்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பல்லடம் தொகுதிகளுக்குட்பட்ட அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் புதிய கட்டிடங்களுக்கான பூமி பூஜை மற்றும் பல்லடம் புதிய கல்வி மாவட்டமாக்கும் தொடக்கவிழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆசிய துணை கண்டமே தமிழகக் கல்வித்துறையை திரும்பிப் பார்க்கின்ற வகையில் 12-ம் வகுப்பு முடித்தவுடனே வேலை வாய்ப்பு, அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் , 'கியூ.ஆர்' கோடுடன் கூடிய பாடப்புத்தகங்கள், 8-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வை-பை வசதி ஆகியவை செய்யப்படவுள்ளது. தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றியமைக்கப்படும், இவ்வாறு கூறினார்.



முகம் சுழிக்கும் பேச்சு:

முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது :- எஜமானருக்கு நன்றியுள்ள பிராணியாக உள்ள நாய் எப்படியோ, அதுபோல ஜெயலலிதாவிற்கு நன்றியுள்ளவராக உடுமலை ராதாகிருஷ்ணன் இருந்ததால் வீட்டுவசதித்துறையைப் பெற்றார். அதிலும், சிறப்பாக செயலாற்றினார், அதுபோல, தற்போதுள்ள கால்நடை பராமரிப்புத்துறையிலும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார், என்றார். அரசு நிகழ்ச்சியில் பொதுமேடையில் சக அமைச்சரைப் பிராணியோடு ஒப்பிட்டு அமைச்சர் செங்கோட்டையன் பேசியது கட்சியினர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...