கோவை: பயறு வகை பயிர்களில் ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தனி அலுவலர் (விதைகள்) அறிவித்துள்ளார்.
கோவை: பயறு வகை பயிர்களில் ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தனி அலுவலர் (விதைகள்) அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி நிலையங்களான பயறுவகை துறை, கோயமுத்தூர், தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையம், வம்பன் மற்றும் விழுப்புரம், மதுரை, சேலம், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள ஐந்து வேளாண்மை அறிவியல் நிலையங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் ‘விதை நடுவம்’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆராய்ச்சி நிலையங்களில் பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு மற்றும் துவரை பயிர்களில் ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது, குறிப்பாக, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட உளுந்து பயிரின் புதிய ரகங்களான, கோ.6, வம்பன் 6, வம்பன் 8, எம்டியு 1, கேகேஎம் 1, பாசிப்பயரில் கோ.7, கோ.8, துவரையில் கோ.ஆர்.ஜp.7 மற்றும் எல்.ஆர்.ஜ.p 41 ஆகிய ரகங்களில்; விதை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் அனைவரும் தங்களுக்குத் தேவையான விதைகளைப் பெற்று பயன்பெற தனிஅலுவலர் (விதைகள்), விதை மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்தூர், தொலைபேசி 0422-6611232, 6611432, 9489056719 மற்றும் 9489347928 மின்னஞ்சல் [email protected] என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி நிலையங்களான பயறுவகை துறை, கோயமுத்தூர், தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையம், வம்பன் மற்றும் விழுப்புரம், மதுரை, சேலம், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள ஐந்து வேளாண்மை அறிவியல் நிலையங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் ‘விதை நடுவம்’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆராய்ச்சி நிலையங்களில் பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு மற்றும் துவரை பயிர்களில் ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது, குறிப்பாக, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட உளுந்து பயிரின் புதிய ரகங்களான, கோ.6, வம்பன் 6, வம்பன் 8, எம்டியு 1, கேகேஎம் 1, பாசிப்பயரில் கோ.7, கோ.8, துவரையில் கோ.ஆர்.ஜp.7 மற்றும் எல்.ஆர்.ஜ.p 41 ஆகிய ரகங்களில்; விதை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் அனைவரும் தங்களுக்குத் தேவையான விதைகளைப் பெற்று பயன்பெற தனிஅலுவலர் (விதைகள்), விதை மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்தூர், தொலைபேசி 0422-6611232, 6611432, 9489056719 மற்றும் 9489347928 மின்னஞ்சல் [email protected] என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.