ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் விற்பனை: வேளாண்மை பல்கலை., அறிவிப்பு

கோவை: பயறு வகை பயிர்களில் ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தனி அலுவலர் (விதைகள்) அறிவித்துள்ளார்.

கோவை: பயறு வகை பயிர்களில் ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தனி அலுவலர் (விதைகள்) அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:- 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி நிலையங்களான பயறுவகை துறை, கோயமுத்தூர், தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையம், வம்பன் மற்றும் விழுப்புரம், மதுரை, சேலம், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள ஐந்து வேளாண்மை அறிவியல் நிலையங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் ‘விதை நடுவம்’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. 

இந்த ஆராய்ச்சி நிலையங்களில் பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு மற்றும் துவரை பயிர்களில் ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது, குறிப்பாக, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட உளுந்து பயிரின் புதிய ரகங்களான, கோ.6, வம்பன் 6, வம்பன் 8, எம்டியு 1, கேகேஎம் 1, பாசிப்பயரில் கோ.7, கோ.8, துவரையில் கோ.ஆர்.ஜp.7 மற்றும் எல்.ஆர்.ஜ.p 41 ஆகிய ரகங்களில்; விதை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் அனைவரும் தங்களுக்குத் தேவையான விதைகளைப் பெற்று பயன்பெற தனிஅலுவலர் (விதைகள்), விதை மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்தூர், தொலைபேசி 0422-6611232, 6611432, 9489056719 மற்றும் 9489347928 மின்னஞ்சல் [email protected] என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...