கோவை: கிரில் வெல்டிங் குறுந்தொழிலுக்கு 400 யூனிட்டிற்குள் பயன்படுத்தும் தொழிற்கூடங்களுக்கு இலவச மின்சாரமும், அதற்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்திலும் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கிரில் குறுந்தொழில் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கிரில் வெல்டிங் குறுந்தொழிலுக்கு 400 யூனிட்டிற்குள் பயன்படுத்தும் தொழிற்கூடங்களுக்கு இலவச மின்சாரமும், அதற்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்திலும் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கிரில் குறுந்தொழில் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு கிரில் குறுந்தொழில் உரிமையாளர் மத்திய சங்கத்தினர் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அதன் கோவை மாவட்ட தலைவர் ரவி கூறுகையில், "இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 1.18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அல்லது பழைய வரியான 5% குறைக்க மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மேலும், கிரில் வெல்டிங் குறுந்தொழிலுக்கு 400 யூனிட்டிற்குள் பயன்படுத்தும் தொழிற்கூடங்களுக்கு இலவச மின்சாரமும் அதற்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும்.
இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவது இல்லை. சொத்து பிணை இல்லாமல் மானியத்துடன் கடன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பட்டா, ஸ்கொயர் ராடு, இரும்பு தகடுகள் போன்றவற்றின் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். தற்போது பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அரசு தொழில் பயிற்சி பாட திட்டங்கள் தொடங்கி பயிற்சி நிலையங்கள் அமைக்க வேண்டும்." என்றார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவ்வமைப்பின் செயலாளர் சின்னசாமி, பொருளாளர் சண்முகம், துணைத் தலைவர்கள் கார்த்திகேயன், மனோகரன் துணை செயலாளர்கள் பிரபு, அனீஸ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு கிரில் குறுந்தொழில் உரிமையாளர் மத்திய சங்கத்தினர் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அதன் கோவை மாவட்ட தலைவர் ரவி கூறுகையில், "இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 1.18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அல்லது பழைய வரியான 5% குறைக்க மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மேலும், கிரில் வெல்டிங் குறுந்தொழிலுக்கு 400 யூனிட்டிற்குள் பயன்படுத்தும் தொழிற்கூடங்களுக்கு இலவச மின்சாரமும் அதற்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும்.
இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவது இல்லை. சொத்து பிணை இல்லாமல் மானியத்துடன் கடன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பட்டா, ஸ்கொயர் ராடு, இரும்பு தகடுகள் போன்றவற்றின் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். தற்போது பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அரசு தொழில் பயிற்சி பாட திட்டங்கள் தொடங்கி பயிற்சி நிலையங்கள் அமைக்க வேண்டும்." என்றார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவ்வமைப்பின் செயலாளர் சின்னசாமி, பொருளாளர் சண்முகம், துணைத் தலைவர்கள் கார்த்திகேயன், மனோகரன் துணை செயலாளர்கள் பிரபு, அனீஸ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.