வேளாண்மை பல்கலை., தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.என் ஆர்த்தி, 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். கொடுமுடி பகுதியை சார்ந்த ஸ்ரீ கார்திகா பழனிச்சாமி 199.67 கட் ஆப் மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். கோவையை சார்ந்த எம். மோகனா 199.5 கட் ஆப் மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.



இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் கே.ராமசாமி கூறுகையில், "வரும் ஜூலை மாதம் 7-ம் தேதி சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். இணையதளம் மூலமாக மட்டுமே கலந்தாய்வு நடைபெறுவதால் கோவைக்கு யாரும் வரவேண்டிய அவசியம் இல்லை.

முதல் முறையாக இணையதள வழியாக வரும் ஜூலை 9 முதல் 13-ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. அதே மாதம் 23-ம் முதல் 27 வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.

தொழில் கல்விக்கான கலந்தாய்வு 16-ல் நடைபெறும். அதே போல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஆகஸ்டு மாதம் முதல் நாள் கல்லூரி தொடங்குகிறது. அதே மாதம் 31-ம் தேதியோடு மாணவர் சேர்க்கை முடிவடையும்.

இணையதள வழியாக நடைபெறும் கலந்தாய்வில் சிலைடிங் (Sliding) முறை அறிமுகப்படுத்தவுள்ளது. இதனால் மாணவர்கள் கலந்தாய்வில் இடங்கள் இருந்தால் தங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம்.

இந்த தரவரிசை பட்டியலில் 197 என்ற கட் ஆப் மதிப்பெண்ணை 100 பேர் பெற்றுள்ளனர். 195.75 கட் ஆப் 200 பேர் பெற்றுள்ளனர். 195 கட் ஆப் 300 பேர் பெற்றுள்ளனர். கலந்தாய்வின் படி மாணவர்களுக்கு அரசு கல்லூரியிலேயே இடம் கிடைக்கும். மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் எந்த விதத்திலும் நெருக்கடி கொடுக்க வேண்டாம்." என்றார்.

48,676 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 32,621 பேர் முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளனர். அவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆண்கள் 13,889 , பெண்கள் 18,732 என்பது குறிப்பிடத்தக்கது.







Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...