புதிய தகவல்களை வெளியிட்டது பனாமா பேப்பர்ஸ்

சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையை உருவாக்கிய பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தையும், பனாமா நாட்டில் இருக்கும் மொசாக் ஃபோன்சக்கா நிறுவனத்தைப் பற்றியும் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டது.

சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையை உருவாக்கிய பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தையும், பனாமா நாட்டில் இருக்கும் மொசாக் ஃபோன்சக்கா நிறுவனத்தைப் பற்றியும் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டது.

பனாமா பேப்பர்ஸ் பற்றிய தகவல்கள் உலக அரங்கில் வெளிப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பின்பு, மீண்டும் பெரிய பிரச்சனையாக உருவாகி இருக்கின்றது. புதிய தகவல்களில் எத்தனை இந்தியர்கள் கணக்கில் காட்டாத சொத்துகளை வெளிநாடுகளில் இருக்கும் தொழில்துறையில் முதலீடாகவும், பணமாகவும் பெற்றிருக்கின்றார்கள் என்பதை வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

புதிதாக வெளியிடப்பட்ட பனாமா பேப்பரில் பார்சிலோனாவின் மெஸ்ஸியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அர்ஜெண்டினா குழுவிற்கு தலைமை ஏற்று ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றார் மெஸ்ஸி. இவர் மீதும் இவருடைய தந்தை மீதும் ஏற்கனவே வருமான வரி ஏய்ப்பு விசாரணை ஸ்பெயினில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார் மெஸ்ஸி.

இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணை தொடர்பாக எஸ்.கே. பஜோரியா நிறுவனத்தின் தலைவர் ஷிஷிர் பஜோரியாவிடம் பேசிய இரண்டாவது நாளிலே பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க முயற்சி செய்துள்ளார்.

கடந்த 2016-ல் வெளியிடப்பட்ட அறிக்கையின் முடிவுப்படி,

நடத்தப்பட்ட சர்வதேச விசாரணைகள் - 150

சர்ச்சையில் சிக்கிக் கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை - 426

இதுவரை இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட சோதனைகள் - 58

இதுவரை இந்தியாவில் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் - 16

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் காட்டப்படாத பண மதிப்பு - ரூ. 1088 கோடி

புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் பனாமா பேப்பர்களில் புதிதாக 1.2 மில்லியன் ஃபைல்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் மொஸாக் ஃபோன்செக்கா நிறுவனம் மற்றும் இதர நிதி நிறுவனங்களுக்கும் இடையேயான வர்த்தக ரீதியான உறவினையும் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 2016-ல் பனாமா தொடர்பான தகவல்கள் வெளிவருவதற்கு முன்பு, மொஸாக் ஃபோன்செக்கா நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்கள் பலருக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாற்றம் செய்திருக்கின்றது.

பி.வி.ஆர்., சினிமாவின் நிறுவனரான அஜய் பிஜ்லி மற்றும் அவருடைய மனைவியின் செலீனா மற்றும் மகன் ஆமெர் ஆகியோருடைய பெயர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...