கோவை அருகே 22,000 லிட்டர் போலி சமையல் எண்ணெய் பறிமுதல்

கோவை: அன்னூரில் பிரபல எண்ணெய் நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 22,000 லிட்டர் சமையல் எண்ணையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கோவை: அன்னூரில் பிரபல எண்ணெய் நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 22,000 லிட்டர் சமையல் எண்ணையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் மானாவாரி விவசாய பயிர்கள் அதிகம் என்பதால் அங்கு நிலக்கடலை, தேங்காய் ஆகியவற்றை கொள்முதல் செய்யும் எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், அங்கு சில போலி எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுவதாகவும். அதில் பிரபல எண்ணெய் நிறுவனங்கள் பெயரில் சட்டவிரோதமாக கலப்பட எண்ணெய்யை தயாரித்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனை உறுதிப்படுத்தும் விதமாக காரணம்பேட்டையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயரில் இருந்த சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை ஆய்வு செய்தனர். அதில் அனைத்தும் கலப்பட எண்ணெய் என்பதும், அன்னூரில் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது. 



இதனையடுத்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று அன்னூர் காவல் நிலையம் பின்புறம் உள்ள முத்துக்குமார் என்பவரது சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்.

ஆனால், அந்நிறுவனம் பூட்டப்பட்டிருந்ததால் காவல்துறை உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கு பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட கலப்பட சமையல் எண்ணெய் சுமார் 22,000 லிட்டர் அளவுடைய பாக்கெட்டுகளை கண்டுபிடித்தனர். 

மேலும், ஆலையில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அந்த கலப்பட எண்ணெய் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்த கோவைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்துள்ள அன்னூர் போலீசார் ஆலை உரிமையாளரான முத்துக்குமார் என்பவரை தேடி வருகின்றனர். 

முத்துக்குமார் அன்னூர் கரியாக்கவுண்டனூர் என்ற கிராமத்தை சார்ந்தவர் என்பதும் பல ஆண்டுகளாக இந்த கலப்பட சமையல் எண்ணெய் நிறுவனத்தை நடத்தி வருவதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய்யின் மதிப்பு ரூ.25 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...