சமையல் செய்த போது வீட்டில் தீ: பெண் உடல் கருகி பலி

திருப்பூர்: காங்கேயம் அருகே சமையல் செய்த போது எதிர்பாராத விதமாக வீட்டில் தீப்பிடித்த விபத்தில் மூதாட்டி ஒருவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர்: காங்கேயம் அருகே சமையல் செய்த போது எதிர்பாராத விதமாக வீட்டில் தீப்பிடித்த விபத்தில் மூதாட்டி ஒருவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

கீரனூர் கிராமம் சென்னிமலைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வாத்தாள் (67). இவருடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்ததைத் தொடர்ந்து, இவர் மட்டுமே தனியாக தென்னங்கீற்றினால் வேயப்பட்ட வீட்டில் குடியிருந்து வந்தார்.

 

இந்நிலையில், நேற்று பகல் 12 மணியளவில் தெய்வாத்தாள் வீட்டில் உள்ள விறகு அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்த போது எதிர்பாராத விதமாக வீட்டின் தென்னங்கீற்றில் நெருப்பு பட்டது. இதைத் தொடர்ந்து தீ பற்றி எரிந்தது. பலத்த காற்று வீசியதால் வீடு முழுவதும் தீயில் கருகியது.

இந்த தீயில் இருந்து தப்பிக்க முடியாத தெய்வாத்தாள் வீட்டினுள்ளேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...