நீலகிரியில் 10 வயதான ஆண் புலி உயிரிழந்தது

நீலகிரி: காலில் காயங்களுடன் கூடலூர் வந்த பத்து வயது மதிக்கத்தக்க புலி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.



நீலகிரி: காலில் காயங்களுடன் கூடலூர் வந்த பத்து வயது மதிக்கத்தக்க புலி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாடந்துறை, கடிசனகொல்லி வனப்பகுதியில் இன்று காலை வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் புலி இறந்து கிடப்பதை பார்த்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு கூடலூர் வன அலுவலர் ராகுல் தலைமையில் அதிகாரிகள் சென்று இறந்த புலியின் உடலை ஆய்வு செய்தனர்.



அப்போது புலியின் கால்களில் காயம் இருந்தது. இந்த நிலையில் இறந்த புலியின் உடலை மீட்ட வனத்துறையினர் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கூடலூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். சம்பவம் நடந்த இடம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ளதால், அங்கிருந்து இந்த புலி வந்திருக்க அதிக வாய்ப்பு இருக்கலாம் என்றும், புலியின் பிரேத பரிசோதனை நாளை காலை நடைபெறும் என்றும் அதன் பின்னரே இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...