இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் 2-ம் கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கோவை: இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் 2-ம் கட்ட குற்றப்பத்திரிகையை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

கோவை: இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் 2-ம் கட்ட குற்றப்பத்திரிகையை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.



கோவை மாநகர் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார். இவர், கோவை சுப்பிரமணிய பாளையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதின்று இரவு 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை துடியலூர் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் என்னும் 4 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். 

இதில், 2016-ம் ஆண்டு அப்துல் ஹகீம் என்பவர் கிருஷ்ணராஜ் காலணி பகுதியில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குபழியாக சசிக்குமார் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கொலையில் அமைப்பு ரீதியான பின்னணி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

இதனிடையே, சசிகுமார் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு துறையினர் பல்வேறு விசாரணைகளை நடத்தினர். இதில், கைது செய்யப்பட்ட முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அபுதாகிர், சுபேர் ஆகியோரின் இல்லங்களில் 3 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனையானது சாய்பாபா காலனி, உக்கடம் ஆகிய பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ., அதிகாரிகள் சசிகுமார் கொலை வழக்கில், முதற்கட்டமாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், இன்று 2-ம் கட்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். இதில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்கள் என்றும், இவர்கள் தமிழகத்தில் தீவிரவாதத்தைத் தூண்டும் நோக்கிலும், மக்கள் மத்தியில் பீதியை கிளப்பும் வகையிலும் செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...