வால்பாறையில் சிறுத்தைப்புலி மரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை

கோவை : வால்பாறை அருகே சிறுத்தைப்புலி ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : வால்பாறை அருகே சிறுத்தைப்புலி ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



வால்பாறையை அடுத்த புதுக்காடு தேயிலை தோட்டத்தில் 1 ஏ- என்.சி.-ல் இன்று காலை தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள தேயிலை செடிபுதர் மறைவில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடந்தது. இதனைக் கண்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, மானாம்பள்ளி வனச்சரகர் சேகர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, இறந்து கிடந்த சிறுத்தைப்புலியின் உடலைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

"சிறுத்தைப்புலியின் உடலில் காயங்கள் இருந்ததுடன் மற்ற விலங்குகள் சாப்பிட்ட தடயம் இருக்கிறது. இறந்த ஆண் சிறுத்தை சுமார் 4 வயது மதிக்கத்தக்கது. நாளை நடைபெறும் உடல்கூறு ஆய்வுக்குப்பின் தான் சிறுத்தை எவ்வாறு இறந்தது என்பது தெரிய வரும்." என வனத்துறையினர் கூறினர். மேலும், சிறுத்தைப்புலியின் மரணம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...