ஆதியோகி சிலை முன்பு அதிவிரைவுப்படையினர் யோகா செய்து அசத்தல்

கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஆதியோகி சிலை முன்பு அதிவிரைவுப்படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மற்றும் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இன்று யோகா செய்தனர்.

கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஆதியோகி சிலை முன்பு அதிவிரைவுப்படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மற்றும் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இன்று யோகா செய்தனர்.



கோவையில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி ஆதியோகி முன்பு யோகா தின நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில், ஐ.என்.எஸ்., அக்ரானி காமண்டிங் ஆபிசர் கமோடர் ராஜிவ்சவுதரி, அதிவிரைவுபடை துணை கமாண்டர் சுந்தரகுமார், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குநர் .ஏ.வாசுகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

மேலும், அதிவிரைவுப்படைவீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்கள், ஈஷா வித்யா மற்றும் கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் ‘யோக நமஸ்காரம்’, ‘ஷாம்ப விமுத்ரா’ ஆகிய யோக பயிற்சிகள் இலவசமாகக் கற்றுக்கொடுக்கப்பட்டன.



யோகா பயிற்சிகளுக்கு பிறகு ஐ.என்.எஸ்.,அக்ரானி கமாண்டிங் ஆபிசர் கமோடர் ராஜிவ் சவுதரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியக் கடற்படையில் பணியாற்றும் வீரர்கள் தங்களது குடும்பத்தினரைப் பிரிந்து நீண்ட நாட்கள் கடலுக்குள் கப்பலில் பணியாற்றுகின்றனர். குடும்பத்தைப் பிரிந்து கடலுக்குள் தனியாக இருப்பது, கடல் பயணத்தில் ஏற்படும் உடல்நலக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகளால் வீரர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அந்த மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்த யோகா பெரிதும் உதவியாக உள்ளது. அதனால், கடற்படை வீரர்களுக்கான பயிற்சி பாடத்திட்டத்தில் யோகாவை சேர்த்துள்ளோம்”, என்றார்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...