நடிகர் அமீர் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

கோவை: தொலைக்காட்சி விவாத மேடையில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய வழக்கில் நடிகர் அமீர் கோவை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரிய வழக்கு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவை: தொலைக்காட்சி விவாத மேடையில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய வழக்கில் நடிகர் அமீர் கோவை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரிய வழக்கு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் கடந்த 9-ம் தேதி கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில்  வட்டமேசை விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகர் அமீர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, அமீரின் கருத்துக்கு பா.ஜ.க.,வினர் கண்டனம் தெரிவித்தனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அமீர் மீதும் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் அதன் நிரூபர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கோவை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, முன்ஜாமீன் வழங்க கால அவகாசம் கேட்டு வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

மேலும், விசாரணைக்கு வரும் வரை அமீரை கைது செய்யக் கூடாது என போலீசாருக்கு நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பவானி மோகன் மற்றும் வழக்கறிஞர்கள் விஜயராகவன் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...