நீலகிரி: லவ்டேல் சதுக்க நெடுஞ்சாலையில் லாரிகள் சிந்திச் செல்லும் நீரால் விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.
நீலகிரி: லவ்டேல் சதுக்க நெடுஞ்சாலையில் லாரிகள் சிந்திச் செல்லும் நீரால் விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.
லவ்டேல் சதுக்க நெடுஞ்சாலையில் தனியார் லாரிகள் தண்ணீர் நிரப்புவதால் அந்த பகுதியில் சாலையில் எப்போதும் ஈரமாகவும், தண்ணீர் ஓடிக்கொண்டும் உள்ளது. மேலும், அப்பகுதியில் நெடுஞ்சாலை சாலை பணி நடைபெறுகின்றது. இதனால், அங்கு களிமண் குவியல் நிறைந்து காணப்படுகிறது.

இதனால், அந்த பகுதியில் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், இன்று காலை கார் ஒன்று இந்த பகுதியை கடக்கும் போது சாலையில் மண்ணுடன் ஈரம் அதிகமாக இருந்ததால் நிலை தடுமாறி கவிழும் நிலையில் தொங்கியது.

வாகனத்தில் இருந்தவர்கள் கீழே குதித்ததால் காயமின்றி உயிர் தப்பினர். இந்த பிரச்சனையில், நெடுஞ்சாலை துரித நடவடிக்கை எடுத்து, உடனடியாக சாலையை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.