சென்னை: சேலம் - சென்னை பசுமை வழிச் சாலைக்காக 8 லட்சம் மரங்களை வெட்டினால் 65 லட்சம் மரங்களை நடுவோம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்.
சென்னை: சேலம் - சென்னை பசுமை வழிச் சாலைக்காக 8 லட்சம் மரங்களை வெட்டினால் 65 லட்சம் மரங்களை நடுவோம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்றம் அரசுக்கு மேலானதாக உள்ளது. நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் அரசால் ஒன்றும் செய்ய முடியாது.
சேலம் எட்டு வழிச் சாலையை பொதுமக்களோ, விவசாயிகளோ எதிர்க்கவில்லை. சமூக ஆர்வலர் என்ற போர்வையில் சிறு, சிறு விவகாரங்களைக் கூட சிலர் பெரிதாக்குகின்றனர். இந்த சாலை அமையப்பெற்றால் சுங்கம் வசூலிப்பது குறித்து அரசு தான் முடிவெடுக்கும்.

சேலம் - சென்னை எட்டு வழி சாலைக்கு சுமார் 8 லட்சம் மரங்கள் வெட்டப்படுவதாக கூறுகிறார்கள். நாங்கள் மரம் வெட்டினாலும் 65 லட்சம் மரக்கன்றுகளை நட்டுவிடுவோம்." என்றார்.