கோவை: பல்லடம் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
கோவை: பல்லடம் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாளி என்ற பகுதியில் தாராபுரத்திலிருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பல்லடம் நோக்கி காடா துணிகளை ஏற்றிக்கொண்டு மினி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.

பெரும்பாளி என்ற பகுதிக்கு வந்த பொழுது எதிரே வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மினி ஆட்டோ மோதியது. ஆட்டோ பேருந்தின் மீது மோதிய வேகத்தில் பேருந்தின் முன்புற கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் ஆறுமுகம் (47), பயணிகள் சுப்பம்மாள் (40), செல்வி (42) உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விபத்தினை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கும், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுனர் அதி வேகமாக வாகனத்தை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், தப்பியோடிய விபத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுனரை பல்லடம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்தினால் சுமார் ஒரு மணி நேரம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாளி என்ற பகுதியில் தாராபுரத்திலிருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பல்லடம் நோக்கி காடா துணிகளை ஏற்றிக்கொண்டு மினி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.

பெரும்பாளி என்ற பகுதிக்கு வந்த பொழுது எதிரே வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மினி ஆட்டோ மோதியது. ஆட்டோ பேருந்தின் மீது மோதிய வேகத்தில் பேருந்தின் முன்புற கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் ஆறுமுகம் (47), பயணிகள் சுப்பம்மாள் (40), செல்வி (42) உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விபத்தினை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கும், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுனர் அதி வேகமாக வாகனத்தை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், தப்பியோடிய விபத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுனரை பல்லடம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்தினால் சுமார் ஒரு மணி நேரம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.