கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் இன்று சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் இன்று சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என பல தரப்பினரும் அதிகாலை முதலே யோகா பயிற்சிகள் ஆசனங்கள் செய்து கொண்டாடினர்.

அதேபோல், கோவை அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகளும், அரசு மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியர்களும் இந்த யோகா தினத்தை கொண்டாடும் விதத்தில் யோகாசனம் செய்தனர். மேலும், வ.உ.சி., மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இந்த யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
