மேட்டுப்பாளையத்தில் ஒரே இடத்தில் இரண்டாயிரம் மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி

மேட்டுப்பாளையம்: உலக யோகா தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் ஒரே இடத்தில் இரண்டாயிரம் மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

மேட்டுப்பாளையம்: உலக யோகா தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் ஒரே இடத்தில் இரண்டாயிரம் மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

மனித குலத்திற்கு பெரும் பிரச்சனையாக கருதப்படுவது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம் ஆகியவையே. இவை எதுவும் தொற்று நோய்கள் அல்ல, உடற்பயிற்சி இன்மை, தலைகீழான உணவு பழக்கம், உறக்கமின்மை போன்ற காரணங்களே இவற்றுக்கு அடிப்படை காரணங்களாக உள்ளது.



இதற்கு மிக சிறந்த தீர்வாக கூறப்படுவது யோகாசனம். உடற்பயிற்சி உடலை மட்டுமே வலுவாக்கும் மனதை செம்மையாக்காது என்ற நிலையில் உடலும், மனமும் ஒரு சேர வளம் பெற யோகாசனம் மட்டுமே தீர்வாக கருதப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த யோகாசனத்தை மேலும் பரவலாக்கும் விதமாக இன்று சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இரண்டாயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்ற பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மலையடிவாரத்தில் இயற்கை எழில் மிகுந்த கல்லார் பகுதியில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற இந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் இரண்டு மணி நேரம் யோகாசனத்தில் உள்ள சூர்ய நமஸ்காரம் துவங்கி, புஜங்காசனம், மத்தியாசனம், சர்வாங்காசனம், யோக முத்ரா, நாடி சுத்தி என பல்வேறு ஆசனங்களை முறைப்படி செய்து காட்டினர்.



பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் கல்வியோடு, யோகாவையும் ஒரு அங்கமாக வைத்துக் கொண்டால் வளரும் இளைய தலைமுறையிரை சிறந்த குடிமகன்களாக உருவாக்க இயலும் எனக்கூறும் இதன் ஆசிரியர்கள், நோயற்ற உலகை உருவாக்க யோகா பெரிதும் உதவும் என்கின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...