கோவையில் ரத்து செய்யப்பட்ட விமானங்களை மீண்டும் இயக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவை: கோவையில் ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களை மீண்டும் இயக்குவதோடு, கூடுதலாகப் பெரிய ரக விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: கோவையில் ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களை மீண்டும் இயக்குவதோடு, கூடுதலாகப் பெரிய ரக விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாளொன்றிற்கு 12 முதல் 15 விமானங்கள் உள்நாடு மற்றும் சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வரும் நிலையில், இது கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்ட தொழில்துறையினருக்கு தொழில் நிமிர்த்தமாக சென்றுவர பெரும் உதவியாக இருந்து வந்தது. 

இந்நிலையில், கோவையிலிருந்து சென்னை செல்லும் 4 விமானங்கள், பெங்களூரூ செல்லும் 3 விமானங்கள் என 7 விமானங்களின் சேவையை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நிறுத்தப்போவதாக 'ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்' அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு கோவை தொழில்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இந்த முடிவு தொடர்பான தொழில் துறையினரின் ஆலோசனைக் கூட்டம் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள கான்பிடரேசன் ஆப் இந்தியன் இண்டஸ்ட்ரீஸ் (CII) அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.ஐ.,யின் தலைவர் ரமேஷ் மற்றும் முன்னாள் தலைவர் ரவி சாம் ஆகியோர் ஜெட் ஏர்வேசின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகக் கூறினர். மேலும், கூடுதலாகப் பெரிய ரக விமானங்கள் (Air bus) இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் விடுத்தனர். 



தொடர்ந்து அவர்கள் பேசியதாவது :- விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது தொழில்துறையினரை கடுமையாக பாதிக்கும். இலாபகரமான முறையில் இயங்கி வரும் இந்த சேவைகள் தடைப்படுவதால், சுமார் 25 ஆயிரம் இருக்கைகள் மாதத்திற்கு ரத்தாகும். விமான சேவைகள் குறைக்கப்படுவதால் இருக்கைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் தொழில்துறையினர் கூடுதலாக செலவழிப்பதைத் தவிர்க்க, வணிகத்தையே தவிர்க்கும் நிலை ஏற்படும். 

விஸ்டா ஏர், ஏர் ஏசியா போன்றவற்றின் விமானங்கள் நிறுத்த இடமில்லாத நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அந்நிறுவனங்களின் சேவையை கோவைக்கு மாற்றவேண்டும். அதற்கு சில மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரையிலும் சேவைகளை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், கோவை விமான நிலையத்தில் இருந்து போயிங், ஏர் பஸ் போன்ற பெரிய ரக விமானங்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர், இணை அமைச்சர்கள், மற்றும் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...