நீலகிரி: குன்னூரில் சிறையில் இருந்து தப்பிய திருடர்களை சினிமா பாணியில் விரட்டி பிடித்த காவல் துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நீலகிரி: குன்னூரில் சிறையில் இருந்து தப்பிய திருடர்களை சினிமா பாணியில் விரட்டி பிடித்த காவல் துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் கதவை சில தினங்களுக்கு முன்பு உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த கொள்ளை தொடர்பாக, ஓட்டல் உரிமையாளர் தாஜிதீன் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த கொள்ளையர்கள் வண்டிச்சோலை பகுதியிலேயே தங்கியிருப்பதை உறுதி செய்தனர். மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டறிந்த நிலையில், திருடர்கள் மூன்று பேரும் தப்பி ஓடினர்.
அவர்களை விடாது விரட்டிய மேல் குன்னூர் ஆய்வாளர் ஜெயமுருகன், உதவி ஆய்வாளர்கள் சண்முகம், யுவராஜ் ஆகியோர் விரட்டினர். சிக்காத கொள்ளையர்கள் நகரப் பகுதிகளுக்குள்ளே சென்று மறைந்தனர். போலீசாரின் சமயோசித புத்தியால் அவர்கள் மூவரும் அகப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் (22), குமரன் (23), குன்னூர் புருக்லேன்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (22) என்பது தெரியவந்தது.
இவர்கள் மீது ஏற்கனவே கோவை மற்றும் தேனி பகுதியில் திருட்டு வழக்கு உள்ளது என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் குன்னூர் சிறையிலடைத்தனர்.

இந்த சூழலில், கொள்ளையர்கள் மூவரும் சிறையில் இருந்து மதியம்1:30 மணியளவில் சுவர் தாண்டி தப்பி ஓடினர். அவர்களை தாக்க முயன்ற போலீசாரையும் தாக்கியதோடு அங்கிருந்த தனியார் பள்ளி வளாகத்தில் நுழைந்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
திருடர்களை விரட்டிப் பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் கதவை சில தினங்களுக்கு முன்பு உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த கொள்ளை தொடர்பாக, ஓட்டல் உரிமையாளர் தாஜிதீன் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த கொள்ளையர்கள் வண்டிச்சோலை பகுதியிலேயே தங்கியிருப்பதை உறுதி செய்தனர். மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டறிந்த நிலையில், திருடர்கள் மூன்று பேரும் தப்பி ஓடினர்.
அவர்களை விடாது விரட்டிய மேல் குன்னூர் ஆய்வாளர் ஜெயமுருகன், உதவி ஆய்வாளர்கள் சண்முகம், யுவராஜ் ஆகியோர் விரட்டினர். சிக்காத கொள்ளையர்கள் நகரப் பகுதிகளுக்குள்ளே சென்று மறைந்தனர். போலீசாரின் சமயோசித புத்தியால் அவர்கள் மூவரும் அகப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் (22), குமரன் (23), குன்னூர் புருக்லேன்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (22) என்பது தெரியவந்தது.
இவர்கள் மீது ஏற்கனவே கோவை மற்றும் தேனி பகுதியில் திருட்டு வழக்கு உள்ளது என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் குன்னூர் சிறையிலடைத்தனர்.

இந்த சூழலில், கொள்ளையர்கள் மூவரும் சிறையில் இருந்து மதியம்1:30 மணியளவில் சுவர் தாண்டி தப்பி ஓடினர். அவர்களை தாக்க முயன்ற போலீசாரையும் தாக்கியதோடு அங்கிருந்த தனியார் பள்ளி வளாகத்தில் நுழைந்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
திருடர்களை விரட்டிப் பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.