சிறையிலிருந்து தப்பியவர்களை சினிமா பாணியில் பிடித்த குன்னூர் போலீஸ்..!

நீலகிரி: குன்னூரில் சிறையில் இருந்து தப்பிய திருடர்களை சினிமா பாணியில் விரட்டி பிடித்த காவல் துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நீலகிரி: குன்னூரில் சிறையில் இருந்து தப்பிய திருடர்களை சினிமா பாணியில் விரட்டி பிடித்த காவல் துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் கதவை சில தினங்களுக்கு முன்பு உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளை தொடர்பாக, ஓட்டல் உரிமையாளர் தாஜிதீன் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த கொள்ளையர்கள் வண்டிச்சோலை பகுதியிலேயே தங்கியிருப்பதை உறுதி செய்தனர். மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டறிந்த நிலையில், திருடர்கள் மூன்று பேரும் தப்பி ஓடினர். 

அவர்களை விடாது விரட்டிய மேல் குன்னூர் ஆய்வாளர் ஜெயமுருகன், உதவி ஆய்வாளர்கள் சண்முகம், யுவராஜ் ஆகியோர் விரட்டினர். சிக்காத கொள்ளையர்கள் நகரப் பகுதிகளுக்குள்ளே சென்று மறைந்தனர். போலீசாரின் சமயோசித புத்தியால் அவர்கள் மூவரும் அகப்பட்டனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் (22), குமரன் (23), குன்னூர் புருக்லேன்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (22) என்பது தெரியவந்தது. 

இவர்கள் மீது ஏற்கனவே கோவை மற்றும் தேனி பகுதியில் திருட்டு வழக்கு உள்ளது என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் குன்னூர் சிறையிலடைத்தனர். 



இந்த சூழலில், கொள்ளையர்கள் மூவரும் சிறையில் இருந்து மதியம்1:30 மணியளவில் சுவர் தாண்டி தப்பி ஓடினர். அவர்களை தாக்க முயன்ற போலீசாரையும் தாக்கியதோடு அங்கிருந்த தனியார் பள்ளி வளாகத்தில் நுழைந்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் மூவரையும் கைது செய்தனர். 

திருடர்களை விரட்டிப் பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...