தமிழ்வழிச் சான்றிதழ் பெறுவதில் குழப்பம்: சிறப்பாசிரியர்களுக்கு சிக்கல்.!

கோவை: ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவின் கலந்தாய்வின் போது, கொண்டுவர வேண்டிய தமிழ்வழிச் சான்றிதழ் இல்லாமல் ஏராளமான சிறப்பாசிரியர்கள் திண்டாடி வருகின்றனர்.


கோவை: ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவின் கலந்தாய்வின் போது, கொண்டுவர வேண்டிய தமிழ்வழிச் சான்றிதழ் இல்லாமல் ஏராளமான சிறப்பாசிரியர்கள் திண்டாடி வருகின்றனர். 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பாசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஓவியம், தையல், இசை, உடற்கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவிற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து 35,781 பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவு கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. 

இதனிடையே, பணியிடங்களுக்கான கலந்தாய்வின் போது, தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்கும் போது தமிழ்வழிச் சான்றிதழ் பெற்று வரவேண்டும். போட்டித்தேர்வுக்கு முன்கூட்டியே 18.08.2017 அன்றே தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ், படித்த கல்லூரி முதல்வர் அல்லது பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக சிறப்பாசிரியர்களுக்கு கல்லூரி படிப்பு கிடையாது. அதற்குப் பதிலாக பள்ளிக்கல்வி தேர்வுத்துறையின் சார்பில் 3 மாத தொழிற்படிப்புகள் பயிற்சி வகுப்புகள் வைத்து, தேர்வு நடத்தி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அதனடிப்படையில் தான் அவர்கள் பணி நிரந்தரத்திற்கான போட்டி தேர்வை எதிர்கொள்வார்கள்.

ஆனால், பள்ளிக்கல்வி தேர்வுத்துறை மூலம் நடத்தி வந்த அரசு தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி தமிழில் தான் நடந்தது. அதேநிலையில், கவின் கலை ஓவிய தொழிற்படிப்புகள் ஆங்கிலத்தில்தான் இருந்தது. இதனால், தமிழ்வழிச் சான்றிதழை எவ்வாறு பெறுவது என தெரியாமல் சிறப்பாசிரியர்கள் தவித்து வந்தனர். இது குறித்து போட்டி தேர்வு நடைபெற்ற போதே, தமிழ்வழிச் சான்றிதழ் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கேட்ட போது, முறையான பதில் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது போட்டித் தேர்வு முடிகள் வெளியாகியுள்ளது. எந்த நேரமும் அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படலாம். ஆனால், 90 சதவீத ஆசிரியர்கள் தமிழ்வழிச் சான்றிதழ் இல்லாமல் அதற்கான காலமும் முடிந்ததால் கலந்தாய்வில் அவர்கள் கலந்துகொள்ள முடியுமா என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் மாநில தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் கூறுகையில், "தொழில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் யாரிடம் தமிழ்வழிச் சான்று பெறுவது என இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளிக்கவில்லை. அதேபோல, தையல் ஆசிரியர் பயிற்சி அரசு தனியாகவும், தனியார் நிறுவனம் தனியாகவும் பயிற்சி நடத்தி உள்ளது. தையல் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் இச்சான்றிதழ் பெற திண்டாடி வருகின்றனர்.

இதனை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொண்டு தமிழ்வழிச் சான்றிதழ் குறித்து தெளிவான பதில் அளிக்க வேண்டும். ஓவிய ஆசிரியர் பயிற்சி, கவின் கலை பட்டப்படிப்பு இவை இரண்டும் இல்லாதவர்களைச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பது தவிர்க்கப்பட வேண்டும். 

அதேபோல, அரசாணையில் ஒருபணி இடத்திற்கு 5 பேர் என்ற முறையில் (1:5) என அழைக்கப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் ஓவிய பகுதிநேர ஆசிரியர்கள் மட்டும் 5,008 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களும் சிறப்பாசிரியர்கள் போட்டித்தேர்வை எழுதியுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த ஓவிய ஆசிரியர்கள் பணி இடம் 327 மற்றும் உடற்கல்விக்கு 663 இடங்களும், தையல் பயிற்சிக்கு 249 இடங்களும், இசைக்கு 86 இடங்களும் என மொத்தம் 1,325 பணி இடங்கள் மட்டுமே நிரப்ப உள்ளது. ஆனால், இத்தகைய போட்டித் தேர்வு எழுதியவர்கள் 35,781 பேர் ஆகும்," என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...