பணியிட மாறுதல் கலந்தாய்வில் முறையான தகவல் இல்லை: திருப்பூரில் ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

திருப்பூர்: திருப்பூரில் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்களுக்கு முறையான தகவல் கொடுக்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்களுக்கு முறையான தகவல் கொடுக்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில், திருப்பூர் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளியில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொள்ள மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆசிரியர்கள் வந்திருந்தனர். 

நீண்ட நேரமாகியும் கலந்தாய்வு தொடங்காததால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெறவிருந்த பொது மாறுதல் கலந்தாய்விற்கும், நாளை நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கும் காலி பணியிடங்கள் இல்லை என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டன. 

இதனால் நீண்ட தூரத்தில் குழந்தைகளுடன் வந்து காத்திருந்த ஆசிரியர்கள் இதுகுறித்து முன்கூட்டியே முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...