திருப்பூர்: திருப்பூரில் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்களுக்கு முறையான தகவல் கொடுக்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்களுக்கு முறையான தகவல் கொடுக்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில், திருப்பூர் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளியில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொள்ள மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆசிரியர்கள் வந்திருந்தனர்.
நீண்ட நேரமாகியும் கலந்தாய்வு தொடங்காததால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெறவிருந்த பொது மாறுதல் கலந்தாய்விற்கும், நாளை நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கும் காலி பணியிடங்கள் இல்லை என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டன.
இதனால் நீண்ட தூரத்தில் குழந்தைகளுடன் வந்து காத்திருந்த ஆசிரியர்கள் இதுகுறித்து முன்கூட்டியே முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில், திருப்பூர் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளியில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொள்ள மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆசிரியர்கள் வந்திருந்தனர்.
நீண்ட நேரமாகியும் கலந்தாய்வு தொடங்காததால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெறவிருந்த பொது மாறுதல் கலந்தாய்விற்கும், நாளை நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கும் காலி பணியிடங்கள் இல்லை என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டன.
இதனால் நீண்ட தூரத்தில் குழந்தைகளுடன் வந்து காத்திருந்த ஆசிரியர்கள் இதுகுறித்து முன்கூட்டியே முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.