ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உணவு தேடிவந்தபோது, விவசாயக் கிணற்றில் விழுந்த மூன்று காட்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டன.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உணவு தேடிவந்தபோது, விவசாயக் கிணற்றில் விழுந்த மூன்று காட்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டன.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வந்த மூன்று காட்டு யானைகள் கானக்குந்தூர் கிராமப் பகுதிக்குள் உணவு தேசி நுழைந்தன.
விளைநிலங்கள் வழியாக வந்த அந்த யானைகள், மருதவேல் என்பவருக்குச் சொந்தமான 15 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தன. சருக்கலான பகுதி வழியாக கிணற்றுக்குள் விழுந்ததால், யானைகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த சூழலில், அங்கு சென்ற பொதுமக்கள் யானைகள் நீரில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள், கிணற்றுக்குள் தவித்துக் கொண்டிருந்த மூன்று யானைகளையும் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் மீட்டனர். பின்னர் அந்த யானைகளை கடம்பூர் வனப்பகுதிக்குள் சென்று விட்டனர்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வந்த மூன்று காட்டு யானைகள் கானக்குந்தூர் கிராமப் பகுதிக்குள் உணவு தேசி நுழைந்தன.
விளைநிலங்கள் வழியாக வந்த அந்த யானைகள், மருதவேல் என்பவருக்குச் சொந்தமான 15 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தன. சருக்கலான பகுதி வழியாக கிணற்றுக்குள் விழுந்ததால், யானைகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த சூழலில், அங்கு சென்ற பொதுமக்கள் யானைகள் நீரில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள், கிணற்றுக்குள் தவித்துக் கொண்டிருந்த மூன்று யானைகளையும் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் மீட்டனர். பின்னர் அந்த யானைகளை கடம்பூர் வனப்பகுதிக்குள் சென்று விட்டனர்.
