விவசாயக் கிணற்றில் விழுந்த 3 காட்டு யானைகள் பத்திரமாக மீட்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உணவு தேடிவந்தபோது, விவசாயக் கிணற்றில் விழுந்த மூன்று காட்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டன.

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உணவு தேடிவந்தபோது, விவசாயக் கிணற்றில் விழுந்த மூன்று காட்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டன. 

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வந்த மூன்று காட்டு யானைகள் கானக்குந்தூர் கிராமப் பகுதிக்குள் உணவு தேசி நுழைந்தன.

விளைநிலங்கள் வழியாக வந்த அந்த யானைகள், மருதவேல் என்பவருக்குச் சொந்தமான 15 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தன. சருக்கலான பகுதி வழியாக கிணற்றுக்குள் விழுந்ததால், யானைகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. 



இந்த சூழலில், அங்கு சென்ற பொதுமக்கள் யானைகள் நீரில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள், கிணற்றுக்குள் தவித்துக் கொண்டிருந்த மூன்று யானைகளையும் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் மீட்டனர். பின்னர் அந்த யானைகளை கடம்பூர் வனப்பகுதிக்குள் சென்று விட்டனர். 



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...