கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை ஈஷா யோகா சத்குரு 'பிட்னஸ் சேலன்ஞ்'க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை ஈஷா யோகா சத்குரு 'பிட்னஸ் சேலன்ஞ்'க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராத் கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, பிரதமர் மோடிக்கு சவால் விட்டார். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர், தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, பலரும் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'பிட்னஸ் சேலன்ஞ்சை எதிர்கொள்ளுமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் சத்குரு அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அழைப்பை ஏற்று, அரசியல் பிரமுகர்கள் ஈஷா யோகா மையத்திற்கு வருவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.