கோவை: மாநகரில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: மாநகரில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா எளிதாக கிடைப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா உத்தரவின் பேரில், (தெற்கு) சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையர் ரமேஷ் கண்ணா தலைமையில் குழு அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சுங்கம் பைபாஸ் சாலை பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ராஜேஷ் குமார் என்பவரை ராமநாதபுரம் தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் ராஜேஷ் குமாரை விசாரித்ததில், அவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் இளைஞர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அதனால் ராஜேஷ் குமாரை போதைப்பொருள் தடுப்பு சட்டம் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.