கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது'

கோவை: மாநகரில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: மாநகரில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா எளிதாக கிடைப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா உத்தரவின் பேரில், (தெற்கு) சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையர் ரமேஷ் கண்ணா தலைமையில் குழு அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சுங்கம் பைபாஸ் சாலை பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ராஜேஷ் குமார் என்பவரை ராமநாதபுரம் தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் ராஜேஷ் குமாரை விசாரித்ததில், அவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் இளைஞர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அதனால் ராஜேஷ் குமாரை போதைப்பொருள் தடுப்பு சட்டம் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...