பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே அண்ணன்-தங்கை இருவரும் கோவிலுக்கு சென்று திரும்பி வரும்போது லாரி மோதிய விபத்தில் இருவரும் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே அண்ணன்-தங்கை இருவரும் கோவிலுக்கு சென்று திரும்பி வரும்போது லாரி மோதிய விபத்தில் இருவரும் பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொள்ளாச்சி கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அஜீத் குமார் மற்றும் மாலதி. அண்ணன்,தங்கையான இவர்கள் இருவரும், அஜீத் குமாரின் பிறந்த நாளையொட்டி இருவரும் பழனி கோவிலுக்கு சென்றனர்.
இந்தநிலையில், கோவிலுக்கு சென்று மீண்டும் பொள்ளாச்சி நோக்கி வரும் போது கோமங்கலம் அருகே லாரி மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அண்ணன், தங்கை இருவரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.