திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சலில் வீட்டுமனை வரைமுறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சலில் வீட்டுமனை வரைமுறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் அனுமதியற்ற மனைப் பிரிவில் வாங்கிய வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கு தமிழக அரசு 6 மாத கால அவகாசம் வழங்கி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயனடையும் வகையில், மனைகளை வரைமுறைப்படுத்துவற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், எஸ்.பெரியபாளையம், அ.பெரியபாளையம் ஆகிய பகுதிகளுக்கான சிறப்பு முகாம் திருப்பூர் பி.என்.ரோடு நெருப்பெரிச்சலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கு விண்ணப்பித்தனர்.
இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், வரைமுறைப்படுத்தப்பட்ட மனைகளுக்கான ஆணைகளையும் அவர் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த முகாமில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி செயற்பொறியாளர் திருமுருகன், உதவி ஆணையர் வாசுக்குமார், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளூர் திட்ட குழும அலுவலர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் அனுமதியற்ற மனைப் பிரிவில் வாங்கிய வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கு தமிழக அரசு 6 மாத கால அவகாசம் வழங்கி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயனடையும் வகையில், மனைகளை வரைமுறைப்படுத்துவற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், எஸ்.பெரியபாளையம், அ.பெரியபாளையம் ஆகிய பகுதிகளுக்கான சிறப்பு முகாம் திருப்பூர் பி.என்.ரோடு நெருப்பெரிச்சலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கு விண்ணப்பித்தனர்.
இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், வரைமுறைப்படுத்தப்பட்ட மனைகளுக்கான ஆணைகளையும் அவர் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த முகாமில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி செயற்பொறியாளர் திருமுருகன், உதவி ஆணையர் வாசுக்குமார், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளூர் திட்ட குழும அலுவலர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.