கோவை : பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில், ரூ. 91 கோடி செலவிலான பாதாள சாக்கடை திட்டத்தை மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை : பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில், ரூ. 91 கோடி செலவிலான பாதாள சாக்கடை திட்டத்தை மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார்.
மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் உற்பத்தியாகும் பவானியாறு கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம் வழியே தமிழகத்திற்குள் நுழைகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு என 3 மாவட்ட மக்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள பவானி நதி மேட்டுப்பாளையம் பகுதியில் கழிவு நீர் கலப்பால் கடுமையாக மாசடைந்து வருகிறது. சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் கரையோர ஊராட்சிகளின் கழிவுகள் எவ்வித சுத்திகரிப்புமின்றி நேரிடையாக பவானியாற்றில் கலக்க விடப்படுவதாலும், இங்குள்ள தொழிற்சாலைகளின் ரசாயனக்கழிவுகள் சட்ட விரோதமாக திறந்து விடப்படுவதாலும் இந்த ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்த இயலாத சூழல் நிலவி வருகிறது.
நகராட்சி கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க பாதாள சாக்கடை திட்டம் தேவை என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்கென தமிழக அரசால் ரூ. 91 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற இத்திட்டப்பணியின் துவக்க விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கலந்துகொண்டு திட்டப்பணியினை தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “ரூ. 40 கோடி செலவில் கோவை – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் பல்லாண்டு கோரிக்கையான அத்திக்கடவு – அவினாசி நிலத்தடி மேம்படுத்தும் திட்டம் இன்று தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளபடி விரைவில் துவக்கப்பட்டு குறித்த காலத்தில் முடிக்கப்படும். இத்திட்டத்தில் விடுபட்டிருந்த பல பகுதிகள் புதிய திட்ட வரைவில் இணைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் உற்பத்தியாகும் பவானியாறு கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம் வழியே தமிழகத்திற்குள் நுழைகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு என 3 மாவட்ட மக்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள பவானி நதி மேட்டுப்பாளையம் பகுதியில் கழிவு நீர் கலப்பால் கடுமையாக மாசடைந்து வருகிறது. சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் கரையோர ஊராட்சிகளின் கழிவுகள் எவ்வித சுத்திகரிப்புமின்றி நேரிடையாக பவானியாற்றில் கலக்க விடப்படுவதாலும், இங்குள்ள தொழிற்சாலைகளின் ரசாயனக்கழிவுகள் சட்ட விரோதமாக திறந்து விடப்படுவதாலும் இந்த ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்த இயலாத சூழல் நிலவி வருகிறது.
நகராட்சி கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க பாதாள சாக்கடை திட்டம் தேவை என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்கென தமிழக அரசால் ரூ. 91 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற இத்திட்டப்பணியின் துவக்க விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கலந்துகொண்டு திட்டப்பணியினை தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “ரூ. 40 கோடி செலவில் கோவை – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் பல்லாண்டு கோரிக்கையான அத்திக்கடவு – அவினாசி நிலத்தடி மேம்படுத்தும் திட்டம் இன்று தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளபடி விரைவில் துவக்கப்பட்டு குறித்த காலத்தில் முடிக்கப்படும். இத்திட்டத்தில் விடுபட்டிருந்த பல பகுதிகள் புதிய திட்ட வரைவில் இணைக்கப்பட்டுள்ளது,” என்றார்.