கோவை : புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி நாற்று நடவு விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கோவை : புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி நாற்று நடவு விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி உற்சவ நாற்று நடவு விழா சிறப்பாக நடைபெறுகிறது. மழை வளம், இயற்கை வளம் பெறுவதற்காக இந்த விழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 11-ம் தேதி நாற்று விடுதல் நிகழ்ச்சியுடன் இந்த விழா தொடங்கியது. அன்று முதல் தினமும் பூஜை செய்யப்பட்ட நாற்றுகள் தேவேந்திரகுல வேளாளர் மடத்தில் இன்று நடப்பட்டது. இந்த விழாவில் கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி உற்சவ நாற்று நடவு விழா சிறப்பாக நடைபெறுகிறது. மழை வளம், இயற்கை வளம் பெறுவதற்காக இந்த விழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 11-ம் தேதி நாற்று விடுதல் நிகழ்ச்சியுடன் இந்த விழா தொடங்கியது. அன்று முதல் தினமும் பூஜை செய்யப்பட்ட நாற்றுகள் தேவேந்திரகுல வேளாளர் மடத்தில் இன்று நடப்பட்டது. இந்த விழாவில் கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
