கோவை: ஈஷா யோகா மையத்தில் வரும் 21-ம் தேதி 4-வது சர்வதேச யோகா தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
கோவை: ஈஷா யோகா மையத்தில் வரும் 21-ம் தேதி 4-வது சர்வதேச யோகா தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் ஈஷா அறக்கட்டளையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 4-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
112 அடி ஆதியோகி முன்பு காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அதிவிரைவு படை (Rapid Action Force) துணை கமாண்டர் சுந்தரகுமார், கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குநர் திருமதி சி.ஏ.வாசுகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
மேலும், 400 அதிவிரைவுப் படை வீரர்கள், 150 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் ஈஷா யோகா மையத்தின் பயிற்சியாளர்கள் மூலம் சக்திவாய்ந்த ‘உப-யோகா’ இலவசமாக கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.
கோவையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைச்சாலைகளிலும் ஈஷா சார்பில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் ஈஷா அறக்கட்டளையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 4-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
112 அடி ஆதியோகி முன்பு காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அதிவிரைவு படை (Rapid Action Force) துணை கமாண்டர் சுந்தரகுமார், கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குநர் திருமதி சி.ஏ.வாசுகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
மேலும், 400 அதிவிரைவுப் படை வீரர்கள், 150 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் ஈஷா யோகா மையத்தின் பயிற்சியாளர்கள் மூலம் சக்திவாய்ந்த ‘உப-யோகா’ இலவசமாக கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.
கோவையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைச்சாலைகளிலும் ஈஷா சார்பில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.