திருப்பூர்: விவசாய போராட்டத்தில் திருப்பூரில் உயிரிழந்த விவசாயிகளின் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாய அமைப்பினர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூர்: விவசாய போராட்டத்தில் திருப்பூரில் உயிரிழந்த விவசாயிகளின் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாய அமைப்பினர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1970-ம் ஆண்டு பெருமாநல்லூரில் நடந்த விவசாய போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாரப்பக்கவுண்டர், ஆயிக்கவுண்டர், ராமசாமிக்கவுண்டர் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.
அவ்வாறு உயிர் நீத்த மூன்று விவசாயிகளின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. பெருமாநல்லூரில் விவசாயிகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டதோடு, உயிர் நீத்த விவசாயிகளுக்கு மணி மண்டபம் கட்டித்தர முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 1970-ம் ஆண்டு பெருமாநல்லூரில் நடந்த விவசாய போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாரப்பக்கவுண்டர், ஆயிக்கவுண்டர், ராமசாமிக்கவுண்டர் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.
அவ்வாறு உயிர் நீத்த மூன்று விவசாயிகளின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. பெருமாநல்லூரில் விவசாயிகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டதோடு, உயிர் நீத்த விவசாயிகளுக்கு மணி மண்டபம் கட்டித்தர முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.