கோவை: கோவையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 150 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கோவை: கோவையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 150 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டல வணிக துணை மேலாளர் சாய்கிருஷ்ணன் கூறுகையில், "கோவை மண்டலத்திற்கு புதியதாக 150 பேருந்துகள் வந்துள்ளன. இதில் சாதரான டவுன் பேருந்து 50 இயக்கப்படும். அதே நேரத்தில் மப்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் 100 இயக்கப்படும். இவை அனைத்துமே பழைய பேருந்துகளுக்கு பதிலாக இயக்கப்படும்." என்றார்.
இதனிடையே இந்த புதிய பேருந்துகள் வரும் ஜூலை மாதம் முதல் இயக்கப்படும் என்று கோவை மண்டல பொது மேலாளர் கோவிந்த்ராஜ் தெரிவித்தார்.